tamilnadu

img

ஜார்கண்ட் தேர்தல் வாக்குப்பதிவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சனிக்கிழமையன்று இரண்டாம்கட்ட சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.  கும்லாமாவட்டம் சிசாய் தொகுதியில் பாக்னி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 36-ல்  காலை முதலே ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் அமைதியாககலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்தசம்பவத்தையடுத்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

;